அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நிச்சயமாக நீங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது பேராவல் கொள்வீர்கள். அது மறுமை நாளில் உங்களுக்கு கைசேதத்திற்குரியதாக இருக்கும். அது எவ்வளவு அருமையான பாலூட்டும் தாய் (ஆரம்பத்தில் உலக ஆதாயங்களைத் தருவதில்)! ஆயினும், அது எவ்வளவு மோசமான பால் மறக்கச் செய்யும் ஒன்று (மறுமையில் அதன் விளைவுகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக)!"