என் தந்தை என்னைச் சுமந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் சொத்திலிருந்து இன்னின்ன அன்பளிப்பை நான் நுஃமானுக்குக் கொடுத்திருக்கிறேன் என்பதற்கு நீங்கள் சாட்சி கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்), “நீர் நுஃமானுக்குக் கொடுத்ததைப் போன்று உம்முடைய எல்லா மகன்களுக்கும் கொடுத்திருக்கிறீரா?” என்று கேட்டார்கள். அவர் (தந்தை), “இல்லை” என்று கூறினார். அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்), “அப்படியானால், என்னைத்தவிர வேறு ஒருவரை இதற்குச் சாட்சியாக அழைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “உம்முடைய பிள்ளைகள் அனைவரும் உம்மிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதில் சமமாக இருப்பது உமக்கு மகிழ்ச்சியளிக்குமா?” என்று கேட்டார்கள். அவர் (தந்தை), “ஆம், நிச்சயமாக” என்று கூறினார். அதற்கு அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்), “அப்படியானால், (அவர்களுக்கு இடையில் சமத்துவத்தை நிலைநாட்டாமல்) அவ்வாறு செய்யாதீர்கள்” என்று கூறினார்கள்.