அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களைச் சுண்டி எறிவதைத் தடை செய்தார்கள்.
இப்னு ஜஃபர் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், "(ஏனெனில்,) அது எதிரியைக் காயப்படுத்தாது; வேட்டைப் பிராணியைக் கொல்லாது. மாறாக, அது பல்லை உடைக்கும்; கண்ணைக் குருடாக்கும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)" எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்னு மஹ்தீ (ரஹ்) அவர்கள், "அது எதிரியைக் காயப்படுத்தாது" என்று கூறினார்கள்; "கண்ணைக் குருடாக்கும்" என்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.