حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَتَاكُمْ أَهْلُ الْيَمَنِ، أَضْعَفُ قُلُوبًا وَأَرَقُّ أَفْئِدَةً، الْفِقْهُ يَمَانٍ، وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யமன் தேசத்து மக்கள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகிய இதயமும், மென்மையான உள்ளமும் கொண்டவர்கள். மார்க்கத்தை விளங்கும் பக்குவம் யமன் நாட்டுக்குரியது. ஞானமும் யமன் நாட்டுக்குரியது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களிடம் யமன் தேசத்தவர்கள் வந்துவிட்டனர். அவர்கள் மென்மையான இதயங்களையும், இளகிய உள்ளங்களையும் கொண்டவர்கள். ஈமான் யமன் சார்ந்தது; ஞானம் யமன் சார்ந்தது. இறைமறுப்பின் தலை கிழக்குத் திசையில் உள்ளது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யமன் வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் உள்ளத்தால் மிக இலகியவர்கள் (அதாவது, சத்தியத்தை ஏற்க எளிதில் இணங்குபவர்கள், கடினத்தன்மை அற்றவர்கள்); நெஞ்சத்தால் மிக மென்மையானவர்கள். ஈமான் யமன் சார்ந்ததாகும்; ஞானமும் யமன் சார்ந்ததாகும்."