அலீ இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் ருகூஃ செய்யும் நிலையிலும் ஸஜ்தா செய்யும் நிலையிலும் இருக்கும்போது குர்ஆனை ஓதுவதை தடைசெய்தார்கள்.
அபூ உமாமா அல்-ஹாரிதீ (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
“எவர் ஒரு முஸ்லிம் மனிதரின் உரிமையைத் தமது (பொய்) சத்தியத்தின் மூலம் அபகரித்துக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து, நரகத்தைக் கடமையாக்கிவிடுகிறான்.”
மக்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அது அற்பமான பொருளாக இருந்தாலும் கூடவா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “அது ‘அராக்’ மரத்தின் குச்சியாக (மிஸ்வாக்) இருந்தாலும் சரியே” என்று கூறினார்கள்.