அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உம்மத்தில் இருந்து எழுபதாயிரம் பேர் எந்தக் கணக்குமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள். அப்போது ஒரு மனிதர் கூறினார்: அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை அவர்களில் ஒருவனாக ஆக்க வேண்டும் என்று அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: யா அல்லாஹ்! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! பின்னர் மற்றொருவர் எழுந்து நின்று கூறினார்: அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை அவர்களில் ஒருவனாக ஆக்க வேண்டும் என்று அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: உக்காஷா (ரழி) அவர்கள் (இந்த விஷயத்தில்) உங்களை முந்திவிட்டார்கள்.