أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ أَنَّ عُثْمَانَ، - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يُصَلِّي الصَّلاَةَ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ الأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا .
உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: 'எந்த மனிதர் உளூ செய்து, அதைச் சிறந்த முறையில் செய்து, பிறகு தொழுகையைத் தொழுதாரோ, அவருக்கு அதற்கும் அடுத்த தொழுகைக்கும் இடையில் உள்ள (சிறு பாவங்கள்), அவர் அதைத் தொழும் வரை மன்னிக்கப்பட்டுவிடும்.''
உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் (மதீனா பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள) இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். அப்போது முஅத்தின் வந்து அவர்களிடம் அஸ்ர் தொழுகைக்கான அறிவிப்பைச் செய்தார். உடனே அவர்கள் தண்ணீர் கேட்டு வரவழைத்து உளூச் செய்தார்கள். பிறகு கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் வேதத்தில் (அதற்குச் சான்றாக ஒரு வசனம்) இல்லாவிட்டால் நான் அதை உங்களுக்கு அறிவித்திருக்கமாட்டேன்." பிறகு கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்றேன்: 'ஒருவர் உளூச் செய்து, அந்த உளூவை செவ்வனே நிறைவேற்றி, பின்னர் தொழுகையைத் தொழுதால், அந்தத் தொழுகைக்கும் அடுத்த தொழுகைக்கும் இடைப்பட்ட (பாவங்கள்) அவருக்கு மன்னிக்கப்படுகின்றன; அவர் அதைத் தொழும் வரை.'"