இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

225ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ رَأَيْتُنِي أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَىَّ فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ‏.‏
ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னால் இருந்த சிலரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் நிற்பது போன்று, (அதாவது நின்று கொண்டே) சிறுநீர் கழித்தார்கள். நான் அவர்களை விட்டு விலகிச் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை நோக்கிச் சைகை செய்தார்கள். ஆகவே நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (சிறுநீர் கழித்து) முடிக்கும் வரை அவர்களின் குதிங்கால் அருகே நின்றேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح