حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ . فَمَسَحَ عَلَيْهِمَا.
முஃகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். (அப்போது) நான் அவர்களுடைய குஃப்ஃபுகளைக் கழற்றக் குனிந்தேன். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டையும் விட்டு விடு! ஏனெனில், நான் அவ்விரண்டையும் (கால்கள்) தூய்மையாக இருந்த நிலையில்தான் அணிந்தேன்' என்று கூறினார்கள். பிறகு அவற்றின் மீது மஸ்ஹு செய்தார்கள்."
عَنْ اَلْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ - رضى الله عنه - قَالَ: { كُنْتُ مَعَ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -فَتَوَضَّأَ, فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ, فَقَالَ: دَعْهُمَا, فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ فَمَسَحَ عَلَيْهِمَا } مُتَّفَقٌ عَلَيْه ِ [1] .
முகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் உளூச் செய்தார்கள். நான் அவர்களின் காலுறைகளைக் கழற்றுவதற்காகக் குனிந்தேன். அதற்கு அவர்கள், “அவற்றை விட்டுவிடுங்கள்; ஏனெனில், நான் அவ்விரண்டையும் தூய்மையான நிலையிலேயே (அதாவது, உளூச் செய்த பிறகு) அணிந்தேன்” என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அவற்றின் மீது மஸ்ஹு செய்தார்கள்.