ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் மாதவிடாய்க்குப் பிறகு எவ்வாறு குளிப்பது என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்பெண்ணுக்குக் குளிக்கும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள்; பிறகு, "கஸ்தூரி தடவிய ஒரு துண்டு (பஞ்சு அல்லது துணியை) எடுத்து, அதனால் தூய்மைப்படுத்திக்கொள்" என்று கூறினார்கள்.
அப்பெண், "அதனால் நான் எவ்வாறு தூய்மைப்படுத்திக்கொள்வது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) அதனால் நீ உன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்" என்று கூறிவிட்டு, (அந்தரங்கமான விஷயத்தைப் பேச வெட்கப்பட்டு) தம்மை மறைத்துக்கொண்டார்கள். – (இதனை அறிவிக்கும்) சுஃப்யான் பின் உயைனா அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் செய்தது போல்) தன் முகத்தின் மீது கையால் சைகை செய்து காட்டினார்கள். –
ஆயிஷா (ரழி) கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் எதை நாடினார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். எனவே, நான் அப்பெண்ணை என் பக்கம் இழுத்து, 'அந்தப் பஞ்சால் இரத்தத்தின் சுவடு உள்ள இடங்களில் துடைத்துக்கொள்' என்று கூறினேன்."
இப்னு அபீ உமர் (எனும் அறிவிப்பாளர்) தமது அறிவிப்பில், "இரத்தத்தின் அடையாளங்கள் மீது அதைத் தடவிக்கொள் (என்று நான் கூறினேன்)" என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.