அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டின் தோள்பட்டைப் பகுதியிலிருந்து (சமைத்த) இறைச்சியை அரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் கத்தியைக் கீழே வைத்துவிட்டு, உளூவைச் செய்யாமலேயே தொழுதார்கள்."
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆட்டின்) முன்னங்கால் இறைச்சியை (கத்தியால்) அரிந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் எழுந்து, கத்தியைக் கீழே போட்டுவிட்டுத் தொழுதார்கள்; (இதற்காக) அவர்கள் உளூச் செய்யவில்லை.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையிலிருந்து (கத்தியால்) வெட்டிச் சாப்பிடுவதைக் கண்டேன். பின்னர், தொழுகைக்காக அழைக்கப்பட்டதும், அவர்கள் எழுந்து, கத்தியைக் கீழே வைத்துவிட்டு, (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.