حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருமுறை இகாமத் சொல்லப்பட்டபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஒரு மூலையில் ஒரு மனிதருடன் (மெல்லிய குரலில்) பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும், (சில) மக்கள் அமர்ந்த நிலையில் கண்ணயர்ந்து தூங்கிவிட்ட வரை அவர்கள் தொழுகையை நடத்தவில்லை.
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَجِيٌّ لِرَجُلٍ فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்; மக்கள் உறங்கிவிடும் வரை அவர்கள் தொழுகையைத் தொடங்கவில்லை."
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَجِيٌّ فِي جَانِبِ الْمَسْجِدِ فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(இரவுத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்ட பிறகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஒரு மூலையில் (ஒருவருடன்) பேசிக்கொண்டிருந்தார்கள். மக்கள் உறங்கும் வரை அவர்கள் தொழுகையைத் தொடங்கவில்லை.