அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது முதுகை உயர்த்தியபோது, கூறினார்கள்: அல்லாஹ், தன்னை புகழ்ந்தவரின் புகழுரையை கேட்டான். யா அல்லாஹ்! எங்கள் இறைவனே! வானங்கள் நிரம்பவும், பூமி நிரம்பவும், இவற்றுக்குப் பிறகு நீ நாடியவை நிரம்பவும் உனக்கே எல்லாப் புகழும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்குவிலிருந்து தம் தலையை உயர்த்தியபோது, கூறினார்கள்: அல்லாஹ்வே! எங்கள் இறைவா, வானங்கள் நிறைய, பூமி நிறைய, அவற்றுக்கு இடையே உள்ளவை நிறைய, இவை தவிர உனக்கு உகந்த மற்றவை நிறைய உனக்கே எல்லாப் புகழும். நீயே எல்லாப் புகழுக்கும் மகிமைக்கும் தகுதியானவன். நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை; நீ தடுப்ப வற்றைக் கொடுப்பவர் எவருமில்லை. மேலும், ஓ மகத்தானவனே!, (எவனுடைய) பெருமையும் உனக்கு எதிராகப் பயனளிக்காது.
நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஸஜ்தா செய்ய விரும்பும்போது, "அல்லாஹும்ம, ரப்பனா வ லக்கல் ஹம்த், மில்அஸ்ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத மின் ஷைஇன் பஃத் (யா அல்லாஹ், எங்கள் இறைவனே, உனக்கே எல்லாப் புகழும் உரியது. வானங்கள் நிரம்பவும், பூமி நிரம்பவும், இவை தவிர நீ நாடும் மற்றவை நிரம்பவும்.)" என்று கூறுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்குவிலிருந்து தங்கள் தலையை உயர்த்தும்போது கூறுவார்கள்: (ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா. ரப்பனா லக்கல் ஹம்த், மில்அஸ் ஸமாவாதி வ மில்அல் அர்ளி வ மில்அ மா பைனஹுமா வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது) 'அல்லாஹ் தன்னை புகழ்வோரின் புகழுரையை கேட்கிறான். எங்கள் இரட்சகனே! உனக்கே எல்லாப் புகழும் உரியது; வானங்கள் நிரம்பவும், பூமி நிரம்பவும், அவற்றுக்கு இடையே உள்ளவை நிரம்பவும், இவை தவிர நீ நாடும் அளவுக்குப் பொருட்களும் நிரம்பவும் (புகழ் அனைத்தும் உனக்கே).' அவர்கள் கூறினார்கள்: இது தொடர்பாக இப்னு உமர் (ரழி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், இப்னு அபி அவ்ஃபா (ரழி) அவர்கள், அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள், மற்றும் அபூ சயீத் (ரழி) அவர்கள் ஆகியோரிடமிருந்து அறிவிப்புகள் உள்ளன.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُبَيْدِ بْنِ الْحَسَنِ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ .
இப்னு அபூஅவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ், அல்லாஹும்ம, ரப்பனா லக்கல்ஹம்த், மில்அஸ்ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷைய்இன் பஃது’ (அல்லாஹ் தன்னைப் புகழ்பவர்களைக் கேட்கிறான். யா அல்லாஹ்! எங்கள் இறைவா! வானங்கள் நிரம்பவும், பூமி நிரம்பவும், இதற்குப் பிறகு நீ நாடியவை நிரம்பவும் உனக்கே எல்லாப் புகழும் உரியது) என்று கூறினார்கள்.”
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي عُمَرَ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، يَقُولُ ذُكِرَتِ الْجُدُودُ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ فِي الصَّلاَةِ فَقَالَ رَجُلٌ جَدُّ فُلاَنٍ فِي الْخَيْلِ . وَقَالَ آخَرُ جَدُّ فُلاَنٍ فِي الإِبِلِ . وَقَالَ آخَرُ جَدُّ فُلاَنٍ فِي الْغَنَمِ . وَقَالَ آخَرُ جَدُّ فُلاَنٍ فِي الرَّقِيقِ . فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَتَهُ وَرَفَعَ رَأْسَهُ مِنْ آخِرِ الرَّكْعَةِ قَالَ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ . وَطَوَّلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَوْتَهُ بِالْجَدِّ لِيَعْلَمُوا أَنَّهُ لَيْسَ كَمَا يَقُولُونَ .
அபூ உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, அவர்கள் முன்னிலையில் செல்வம் பற்றி பேசப்பட்டது. ஒரு மனிதர், ‘இன்னாரின் செல்வம் குதிரைகளில் உள்ளது’ என்றார். இன்னொரு மனிதர், ‘இன்னாரின் செல்வம் ஒட்டகங்களில் உள்ளது’ என்றார். மற்றொரு மனிதர், ‘இன்னாரின் செல்வம் ஆடுகளில் உள்ளது’ என்றார். வேறொரு மனிதர், ‘இன்னாரின் செல்வம் அடிமைகளில் உள்ளது’ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது தொழுகையை முடிக்கும் தருவாயில், கடைசி ரக்அத்தின் முடிவில் தமது தலையை உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்த் மில்அஸ்-ஸமாவாத்தி வ மில்அல்-அர்ள் வ மில்அ மா ஷிஃத மின் ஷைஇன் பஃது. அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத வ லா முஃதிய லிமா மனஃத வ லா யன்ஃபஉ தல்-ஜத்தி மின்கல்-ஜத் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை கேட்கிறான். யா அல்லாஹ்! எங்கள் இரட்சகனே! வானங்கள் நிரம்பும் அளவுக்கு, பூமி நிரம்பும் அளவுக்கு, அதன் பிறகு நீ நாடும் அளவுக்கு உனக்கே எல்லாப் புகழும். யா அல்லாஹ், நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை, நீ தடுப்பக் கொடுப்பவர் எவருமில்லை, மேலும் எந்தச் செல்வந்தரின் செல்வமும் உனக்கு எதிராகப் பயனளிக்காது)’ என்று கூறினார்கள். அது அவர்கள் கூறியது போல் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்காக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜத் (செல்வம்) என்ற வார்த்தையை நீட்டி ஓதினார்கள்.”