அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்திலன்றி (வேறு நேரத்தில்) தொழுது நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர: (ஒன்று) 'ஜம்ஃ' (எனும் முஸ்தலிஃபா)வில் மஃரிப் மற்றும் இஷா தொழுகைகள்; (மற்றொன்று) அந்நாளில் ஃபஜ்ர் தொழுகையை அதன் (வழக்கமான) நேரத்திற்கு முன்பே அவர்கள் தொழுதார்கள்.