இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஏழு உறுப்புகளின் (அதாவது, நெற்றி மற்றும் மூக்கு, இரு கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் விரல்கள்) மீது ஸஜ்தா செய்யுமாறும், தமது முடியையோ ஆடையையோ (தொழுகையின் போது) சுருக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டார்கள்.