மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, பின்னாலிருந்து பார்த்தால் அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்குத் தங்கள் கைகளை (உடலிலிருந்து) விலாப்புறங்களிலிருந்து அகற்றி வைப்பார்கள். மேலும், அவர்கள் (தொழுகையில்) அமரும்போது தங்கள் இடது தொடையின் மீது (சாய்ந்து) அமர்வார்கள்.