அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் ஹிஜ்ரத் செய்வதற்காக (இஸ்லாத்திற்காக நாட்டைத் துறந்து) உங்களிடம் உறுதிமொழி அளிக்க வந்துள்ளேன். ஆனால், என் பெற்றோரை அழ வைத்துவிட்டு வந்துள்ளேன்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களிடம் திரும்பிச் சென்று, நீ அவர்களை எப்படி அழ வைத்தாயோ, அப்படியே அவர்களைச் சிரிக்க வை" என்று கூறினார்கள்.