இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

414ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ،‏.‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ، ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى‏.‏ وَعَنِ الزُّهْرِيِّ سَمِعَ حُمَيْدًا عَنْ أَبِي سَعِيدٍ نَحْوَهُ‏.‏
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கிப்லாவின் திசையிலுள்ள சுவரில் சளி இருந்ததைக் கண்டார்கள். அதனை ஒரு சிறு கல்லால் சுரண்டி அகற்றினார்கள்.

பின்னர் அவர்கள் முன்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ உமிழ்வதைத் தடுத்தார்கள், ஆனால் ஒருவரின் இடப்புறமாகவோ அல்லது அவரின் இடது காலுக்குக் கீழேயோ உமிழ்வதை அனுமதித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح