இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5817ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي خَمِيصَةٍ لَهُ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا سَلَّمَ قَالَ ‏ ‏ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي، وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ بْنِ غَانِمٍ مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கரைகள் (வேலைப்பாடுகள்) கொண்ட ‘கமீஸா’ (ஒருவகை கருப்பு கம்பளி ஆடை) ஒன்றை அணிந்து தொழுதார்கள். (தொழுகையில்) அதன் கரைகளை அவர்கள் ஒருமுறை பார்த்தார்கள். சலாம் கொடுத்ததும், “என்னுடைய இந்தக் கமீஸாவை அபூ ஜஹ்ம் (ரலி) அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், சற்றுமுன் அது தொழுகையில் என் கவனத்தைத் திசை திருப்பியது. மேலும், பனூ அதீ இப்னு கஃப் கிளையைச் சேர்ந்த அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைஃபா இப்னு ஃகானிம் உடைய ‘அன்பிஜானியா’வை (கரைகளற்ற தடிமனான ஆடையை) என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4052சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا فَلَمَّا سَلَّمَ قَالَ ‏ ‏ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا فِي صَلاَتِي وَأْتُونِي بِأَنْبِجَانِيَّتِهِ ‏ ‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ أَبُو جَهْمِ بْنُ حُذَيْفَةَ مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبِ بْنِ غَانِمٍ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடுகள் கொண்ட 'கமீஸா' (எனும் ஒரு வகை மேலாடை) அணிந்து தொழுதார்கள். அவர்கள் அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். (தொழுகையை முடித்து) ஸலாம் கொடுத்ததும், “எனது இந்த 'கமீஸா' ஆடையை அபூஜஹ்ம் அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள்; ஏனெனில் அதன் வேலைப்பாடுகள் சற்று முன்பு எனது தொழுகையில் எனது கவனத்தைத் திருப்பிவிட்டன. மேலும், அவரிடமுள்ள 'அன்பஜானிய்யா' (எனும் எளிமையான, தடித்த) ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அபூதாவூத் கூறினார்கள்: அபூஜஹ்ம் இப்னு ஹுதைஃபா, பனூ அதீ இப்னு கஅப் இப்னு ஃகனம் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)