இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5451ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ قِيلَ لأَنَسٍ مَا سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الثُّومِ فَقَالَ ‏ ‏ مَنْ أَكَلَ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا ‏ ‏‏.‏
அப்துல் அஸீஸ் அவர்கள் அறிவித்தார்கள்:

அனஸ் (ரழி) அவர்களிடம், "பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியதை தாங்கள் கேட்டீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அனஸ் (ரழி) அவர்கள், "(பூண்டை) சாப்பிட்டவர் எங்கள் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம்" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح