حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ فِيهَا السَّجْدَةُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா (சிரவணக்கம்) உள்ள ஒரு சூராவை எங்களுக்கு ஓதிக்காட்டுவார்கள். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள்; நாங்களும் ஸஜ்தாச் செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைக்கவும் இடம் கிடைக்காது.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தா (வசனத்தை) ஓதுவார்கள்; நாங்கள் அவர்களுடன் இருப்போம். அவர்கள் சஜ்தாச் செய்வார்கள்; நாங்களும் அவர்களுடன் சஜ்தாச் செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைத்து சஜ்தாச் செய்ய இடம் கிடைக்காத அளவுக்கு நாங்கள் நெருக்கியடித்துக் கொள்வோம்.
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ السُّورَةَ الَّتِي فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா (வசனம்) உள்ள அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தா செய்வார்கள். அப்போது நாங்களும் ஸஜ்தா செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைப்பதற்குக்கூட இடம் கிடைக்காது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இப்னு நுமைரின் அறிவிப்பின்படி) தொழுகைக்கு வெளியே எங்களுக்கு ஒரு சூராவை ஓதிக் காட்டுவார்கள். (ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவிப்பின்படி) பிறகு அவர்கள் சஜ்தா செய்வார்கள்; நாங்களும் அவர்களுடன் சஜ்தா செய்வோம். எங்களில் எவராலும் தன் நெற்றியை வைப்பதற்கு ஓர் இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாது.