حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ عَبَّاسٍ كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நபி (ஸல்) அவர்களின் காலத்தில், மக்கள் கடமையான தொழுகையை முடித்துத் திரும்பும்போது திக்ரை உரக்கச் சொல்வது (ஒரு நடைமுறையாக) இருந்தது.”
மேலும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அச்சப்தத்தை நான் செவியுறும்போது, அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்பிவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.”
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் கடமையான தொழுகையை முடித்தப் பிறகு, திக்ருக்காக சப்தத்தை உயர்த்துவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை முடித்து) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்பதை நான் அதைக் கொண்டு அறிந்துகொள்வேன்; மேலும் அதை (திக்ரை) நான் செவியேற்பேன்.