وَحَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَلِجُ النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا . وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ فَقَالَ آنْتَ سَمِعْتَ هَذَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ أَشْهَدُ بِهِ عَلَيْهِ . قَالَ وَأَنَا أَشْهَدُ لَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُهُ بِالْمَكَانِ الَّذِي سَمِعْتَهُ مِنْهُ .
உமாரா இப்னு ருவைபா (ரழி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: சூரியன் உதயமாவதற்கு முன்னரும் அது மறைவதற்கு முன்னரும் எவர் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ, அவர் (நரக) நெருப்பில் நுழைய மாட்டார், அவரிடம் பஸ்ராவைச் சேர்ந்த ஒரு மனிதர் (அமர்ந்திருந்தார்), அவர் கேட்டார்: இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டீர்களா? அவர்கள் கூறினார்கள்: ஆம், நான் அதற்கு சாட்சி கூறுகிறேன். அந்த பஸ்ரா மனிதர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறுவதை, நீங்கள் அவரிடமிருந்து கேட்ட அதே இடத்திலிருந்து நான் கேட்டேன் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்.
அபூபக்ர் இப்னு உமாரா இப்னு ருவைபா அஸ்-ஸகஃபீ அவர்கள் தங்களின் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் தொழுதவர், ஒருபோதும் நரக நெருப்பில் நுழைய மாட்டார்' என்று கூறக் கேட்டேன்."
அபூபக்ர் பின் உமாரா பின் ருவைபா அவர்கள், தனது தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் தொழுபவர் எவரும் நரக நெருப்பில் நுழைய மாட்டார்' என்று கூற நான் கேட்டேன்."
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ فَقَالَ أَخْبِرْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَلِجُ النَّارَ رَجُلٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ أَنْ تَغْرُبَ . قَالَ أَنْتَ سَمِعْتَهُ مِنْهُ ثَلاَثَ مَرَّاتٍ . قَالَ نَعَمْ . كُلَّ ذَلِكَ يَقُولُ سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي . فَقَالَ الرَّجُلُ وَأَنَا سَمِعْتُهُ صلى الله عليه وسلم يَقُولُ ذَلِكَ .
உமாரா இப்னு ருவைபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பஸ்ராவைச் சேர்ந்த ஒரு மனிதர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எனக்குச் சொல்லுங்கள். அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளை தொழுத எவரும் நரகத்திற்குள் நுழைய மாட்டார். அவர் மூன்று முறை கேட்டார்: இதை நீங்கள் அவர்களிடமிருந்து கேட்டீர்களா? அவர் பதிலளித்தார்: ஆம், ஒவ்வொரு முறையும் கூறினார்: என் காதுகள் அதைக் கேட்டன, என் இதயம் அதை மனனம் செய்தது. பின்னர் அந்த மனிதர் கூறினார்: நானும் அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) அதைக் கூறக் கேட்டேன்.