இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு நாள் இரவு நாங்கள் (இஷாவின்) பிந்திய தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்ற பின்னர் அல்லது அதற்குப் பிறகு அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் (வெளியே) வந்தபோது, 'வேறு எந்த மார்க்கத்தவரும் எதிர்பார்த்திராத ஒரு தொழுகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள். என் உம்மத்திற்குச் சிரமமாகிவிடும் என்று இல்லாவிட்டால், இந்த நேரத்தில்தான் நான் அவர்களுக்குத் தொழுகை நடத்தியிருப்பேன்' என்று கூறினார்கள். பின்னர் முஅத்தினுக்குக் கட்டளையிட்டார்கள்; அவர் இகாமத் சொன்னார். பிறகு அவர்கள் தொழுதார்கள்."
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஒருநாள் இரவு இஷா தொழுகையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் காத்திருந்தோம். இரவில் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் அல்லது அதற்கும் பிறகு அவர்கள் எங்களிடம் வந்தார்கள். ஏதேனும் ஒரு வேலை அவர்களைத் தடுத்ததா அல்லது வேறு ஏதேனும் விஷயமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் வெளியே வந்தபோது, "நீங்கள் இந்தத் தொழுகைக்காகக் காத்திருக்கிறீர்களா? என் சமூகத்தாருக்குச் சிரமமாக ஆகிவிடும் என்றில்லாவிட்டால், நான் இந்த நேரத்தில்தான் அவர்களுடன் தொழுவேன் (இதுவே இஷா தொழுகைக்குரிய சிறந்த நேரம் என்பதால்)." என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிட, அவர் தொழுகைக்கான இகாமத் கூறினார்.