இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

783சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بَيْتُهُ أَقْصَى بَيْتٍ بِالْمَدِينَةِ وَكَانَ لاَ تُخْطِئُهُ الصَّلاَةُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ فَتَوَجَّعْتُ لَهُ فَقُلْتُ يَا فُلاَنُ لَوْ أَنَّكَ اشْتَرَيْتَ حِمَارًا يَقِيكَ الرَّمَضَ وَيَرْفَعُكَ مِنَ الْوَقَعِ وَيَقِيكَ هَوَامَّ الأَرْضِ ‏.‏ فَقَالَ وَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ بَيْتِي بِطُنُبِ بَيْتِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ فَحَمَلْتُ بِهِ حِمْلاً حَتَّى أَتَيْتُ بَيْتَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَدَعَاهُ فَسَأَلَهُ فَذَكَرَ لَهُ مِثْلَ ذَلِكَ وَذَكَرَ أَنَّهُ يَرْجُو فِي أَثَرِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِنَّ لَكَ مَا احْتَسَبْتَ ‏ ‏ ‏.‏
உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அன்சாரிகளில் ஒரு மனிதர் இருந்தார். மதீனாவிலேயே அவரது வீடுதான் (பள்ளிவாசலை விட்டு) மிகத் தொலைவில் இருந்தது. ஆயினும், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எந்தத் தொழுகையையும் தவறவிட்டதில்லை. அவருக்காக நான் வருத்தப்பட்டு அவரிடம், 'நீர் ஒரு கழுதையை வாங்கக் கூடாதா? அது கொளுத்தும் வெயிலின் சூட்டிலிருந்தும், கடினமான தரையிலிருந்தும் உம்மைக் காக்குமே! இன்னும் பூமியின் பூச்சிகளிடமிருந்தும் (உம்மைக் காக்குமே!)' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது வீடு முஹம்மது (ஸல்) அவர்களின் வீட்டுக்கு மிக அருகில் இருப்பதை நான் விரும்பவில்லை' என்று கூறினார். (அவர் கூறிய) இது, நான் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வந்து அவர்களிடம் அதைப் பற்றிக் குறிப்பிடும் வரை எனக்குப் பெரும் பாரமாக (வருத்தமாக) இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழை(த்து விசாரி)த்தார்கள். அவரும் (என்னிடம் கூறியவாறே) அதனைக் கூறிவிட்டு, தனது காலடிச் சுவடுகளுக்குரிய நன்மையை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நீர் (நன்மையை) எதிர்பார்த்தது உமக்குக் கிடைக்கும்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)