அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவரின் வாசலில் ஒரு நதி இருந்து, அதில் அவர் தினமும் ஐந்து முறை குளித்தால், அவரது அழுக்கில் ஏதேனும் மீதமிருக்குமா? சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவரது அழுக்கில் எதுவும் மீதமிருக்காது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இதுவே ஐந்து நேரத் தொழுகைகளின் உதாரணமாகும்; இவற்றின் மூலம் அல்லாஹ் பாவங்களை அழிக்கிறான்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்து, அதில் அவர் தினமும் ஐந்து முறை குளித்தால், அவரின் மீது ஏதாவது அழுக்கு மிஞ்சியிருக்குமா என்று நீங்கள் கருதுகிறீர்களா?" அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அவர் மீது எந்த அழுக்கும் தங்கியிருக்காது." அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இதுதான் ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இவற்றின் மூலம் அல்லாஹ் பாவங்களை அழிக்கிறான்."
وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "أرأيتم لو أن نهرًا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات، هل يبقى من درنه شيء؟" قالوا: لا يبقى من درنه شيء، قال: "فذلك مثل الصلوات الخمس، يمحو الله بهن الخطايا".((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "கூறுங்கள்! உங்களில் ஒருவரது வாசலில் ஓர் ஆறு இருந்து, அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை குளித்தால், அவரது அழுக்குகளில் ஏதேனும் எஞ்சியிருக்குமா?" அதற்கு அவர்கள், "அவரது அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்காது" என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இதுதான் ஐந்து நேரத் தொழுகைகளின் உவமையாகும். இவற்றின் மூலம் அல்லாஹ் பாவங்களை அழிக்கிறான்."