أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ عَرَّسْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ نَسْتَيْقِظْ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيَأْخُذْ كُلُّ رَجُلٍ بِرَأْسِ رَاحِلَتِهِ فَإِنَّ هَذَا مَنْزِلٌ حَضَرَنَا فِيهِ الشَّيْطَانُ . قَالَ فَفَعَلْنَا فَدَعَا بِالْمَاءِ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى سَجْدَتَيْنِ ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى الْغَدَاةَ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இரவின் இறுதியில் ஓரிடத்தில் தங்கினோம். சூரியன் உதிக்கும் வரை நாங்கள் விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒவ்வொருவரும் தத்தமது ஒட்டகத்தின் தலையைப் பிடித்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் இந்த இடத்தில் ஷைத்தான் நம்முடன் இருந்தான்.' நாங்கள் அவ்வாறே செய்தோம். பிறகு அவர்கள் தண்ணீர் கேட்டு உளூச் செய்தார்கள்; பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் (ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையின் இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். பிறகு இகாமத் சொல்லப்பட்டது; அவர்கள் காலைத் தொழுகையை (ஃபஜ்ர்) தொழுதார்கள்."