யஹ்யா பின் யஸீத் அல்ஹன்னாஈ அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் (பயணத்தில்) தொழுகையைச் சுருக்குவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று ஃபர்ஸக் (அறிவிப்பாளர் ஷுஃபா சந்தேகித்தார்) தொலைவிற்கு ஒரு பயணமாகப் புறப்பட்டால், அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.