حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، مَرَّ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்று அவர்களுக்கு ஸலாம் கூறினார், ஆனால், அவர்கள் அவருடைய ஸலாமுக்கு பதிலளிக்கவில்லை.
அப்துல்லாஹ் பின் தீனார் (ரழி) அவர்கள், இப்னு உமர் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் எந்த திசையை முன்னோக்கி இருந்தாலும் (அதனைப் பொருட்படுத்தாமல்) அதன் மீது தொழுவார்கள். அப்துல்லாஹ் பின் தீனார் (ரழி) அவர்கள், இப்னு உமர் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று கூறினார்கள்.