ஸாலிம் அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் (இப்னு உமர் ரழி) அவர்கள் இரவில் பயணத்தின்போது தமது வாகனத்தின் மீது தொழுவார்கள், மேலும் தாம் எந்த திசையை நோக்கியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது எந்த திசையை நோக்கியிருந்தாலும் உபரியான தொழுகையைத் தொழுவார்கள், மேலும் அதன் மீது வித்ரு தொழுகையையும் தொழுவார்கள், ஆனால் கடமையான தொழுகையை அதன் மீது தொழமாட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபிஆ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தம் தந்தை (ஆமிர் இப்னு ரபிஆ (ரழி)) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது இரவில், அவர்களுடைய வாகனத்தின் மீது, அது எந்த திசை நோக்கித் திரும்பினாலும், நஃபில் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்ததை தாம் கண்டதாகக் கூறினார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (பயணத்தின் போது), அது எத்திசையை முன்னோக்கியிருந்தாலும் சரியே (கஅபாவை முன்னோக்க வேண்டிய அவசியமின்றி), உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள்; அவ்வாறே அதன் மீது வித்ரு தொழுகையையும் தொழுவார்கள். ஆனால், கடமையான தொழுகைகளை அதன் மீது தொழ மாட்டார்கள்.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தின் மீது, அது செல்லும் திசையை நோக்கியவாறு (நஃபிலான) தொழுவார்கள். மேலும் அதன் மீது வித்ர் தொழுவார்கள். ஆயினும், கடமையான தொழுகைகளை அதன் மீது தொழமாட்டார்கள்."
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ أَىَّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي الْمَكْتُوبَةَ عَلَيْهَا .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது, அது எந்தத் திசையில் திரும்பினாலும் உபரியான (நஃபிலான) தொழுகையைத் தொழுவார்கள்; மேலும், அதன் மீது வித்ரு தொழுகையையும் தொழுவார்கள். ஆனால், அதன் மீது கடமையான தொழுகைகளைத் தொழ மாட்டார்கள்.