இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (ஃபர்ளு தொழுகைக்கு முந்தைய சுன்னத்தான) இரண்டு ரக்அத்களில், முதலாவது ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள **”கூலூ ஆமன்னா பில்லாஹி வமா உண்ஸில இலைனா...”** எனும் வசனத்தையும், இரண்டாவது ரக்அத்தில் **”ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்”** எனும் வசனத்தையும் ஓதுவார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்களில், அவற்றில் முதலாவதில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள (வசனம் 136) “கூலூ ஆமன்னா பில்லாஹி வமா உன்ஸில இலைனா” (அல்லாஹ்வின் மீதும், எங்களுக்கு அருளப்பட்டதன் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுங்கள்) என்ற வசனத்தை அதன் இறுதி வரையிலும், மற்றொன்றில் (ஆலு இம்ரான் அத்தியாயத்திலுள்ள வசனம் 52) “ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்” (நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோம்; நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்) என்ற வசனத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.