உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் ஒரு நாளில் கடமையான தொழுகைகளைத் தவிர பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான், அல்லது அவருக்காக ஒரு வீடு கட்டப்படும்.’”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு நாளில் கடமையான தொழுகைகள் அல்லாமல் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் (சுப்ஹானஹு வதஆலா) சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்."
உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு இரவிலும் பகலிலும் எவரொருவர் பன்னிரண்டு ரக்அத்கள் உபரியாக (கூடுதலான தொழுகை) தொழுகிறாரோ, இ(ந்த ரக்அத்க)வற்றின் காரணமாக அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்.