அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய (போர்) பயணங்களில் ஒன்றின்போது பயங்காலத் தொழுகையைத் தொழுதார்கள். ஒரு குழுவினர் அவர்களுடன் நின்றார்கள், மற்றொரு குழுவினர் எதிரியை எதிர்கொண்டிருந்தார்கள். (முதலில்) தங்களுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் ஒரு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் (எதிரியை நோக்கிச்) சென்றுவிட, மற்றவர்கள் வந்தார்கள், அவர்களுக்கும் ஒரு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். பிறகு இரு குழுவினரும் தலா ஒரு ரக்அத்தை (தனித்தனியாக) நிறைவேற்றினார்கள்.