அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகில்) கடைசியாக வந்த நாம், மறுமை நாளில் முந்தியவர்கள் ஆவோம். எனினும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டது; நமக்கு அவர்களுக்குப் பின்பே அது வழங்கப்பட்டது. அல்லாஹ் நம் மீது விதியாக்கியதும், அவன் நம்மை அதன் பால் வழிகாட்டியதும் இந்த நாளையே (வெள்ளிக்கிழமையே) ஆகும். எனவே, மக்கள் இதில் நம்மைப் பின்தொடர்கின்றனர்; யூதர்கள் (வெள்ளிக்கிழமைக்கு) அடுத்த நாளையும் (சனிக்கிழமை), கிறிஸ்தவர்கள் அதற்கு அடுத்த நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) (தங்கள் சிறப்பு நாளாகக்) கொண்டனர்.