ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றவாறு (ஜும்ஆ) உரை நிகழ்த்துவார்கள், பிறகு அமர்வார்கள், பிறகு (மீண்டும்) எழுந்து நின்று (இரண்டாம்) உரை நிகழ்த்துவார்கள். யாரேனும் உங்களிடம், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தவாறு உரை நிகழ்த்தினார்கள் என்று கூறினால், அவர் பொய் சொல்கிறார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் அவர்களுடன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன்.