உமாரா இப்னு ருவைபா (ரலி) அவர்கள், பிஷ்ர் இப்னு மர்வான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) அன்று (பிரசங்கத்தின் போது இரு கரங்களையும் உயர்த்தி) பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது உமாரா (ரலி), "(இப்படி உயர்த்தப்பட்ட) இந்த இரு கரங்களையும் அல்லாஹ் இழிவுபடுத்துவானாக!" என்று கூறிவிட்டு, "(ஏனெனில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மிம்பரின் மீது கண்டிருக்கிறேன்; அவர்கள் (பிரசங்கத்தின் போது பிரார்த்தனை செய்யும் போது) இதை விட - அதாவது பெருவிரலை அடுத்துள்ள ஆட்காட்டி விரலை விட - அதிகமாக (சைகை) செய்ய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.