وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: { أُتِيَ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم -بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ, فَلَمْ يُصَلِّ عَلَيْهِ } رَوَاهُ مُسْلِمٌ [1] .
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ‘அகலமான அம்பினால் தற்கொலை செய்துகொண்ட ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார், ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.’ இதனை முஸ்லிம் அறிவிக்கிறார்கள்.