இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2537சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ عُمَيْرًا، مَوْلَى آبِي اللَّحْمِ قَالَ أَمَرَنِي مَوْلاَىَ أَنْ أُقَدِّدَ، لَحْمًا فَجَاءَ مِسْكِينٌ فَأَطْعَمْتُهُ مِنْهُ فَعَلِمَ بِذَلِكَ مَوْلاَىَ فَضَرَبَنِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَاهُ فَقَالَ ‏"‏ لِمَ ضَرَبْتَهُ ‏"‏ ‏.‏ فَقَالَ يُطْعِمُ طَعَامِي بِغَيْرِ أَنْ آمُرَهُ وَقَالَ مَرَّةً أُخْرَى بِغَيْرِ أَمْرِي قَالَ ‏"‏ الأَجْرُ بَيْنَكُمَا ‏"‏ ‏.‏
ஆபி அல்-லஹ்ம் அவர்களின் மவ்லா (விடுவிக்கப்பட்ட அடிமை) உமைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"என் எஜமானர் இறைச்சியை உலர்த்துவதற்காக வெட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டார். அப்போது ஓர் ஏழை வந்தார். நான் அவருக்கு அதிலிருந்து உணவளித்தேன். இதனையறிந்த என் எஜமானர் என்னை அடித்தார். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் எஜமானரை அழைத்து, 'நீ ஏன் அவனை அடித்தாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நான் கட்டளையிடாமலேயே அவன் என் உணவைக் கொடுக்கிறான்' என்று கூறினார். (அவர் மேலும்) 'என் கட்டளையின்றி' என்று மற்றொரு முறை கூறினார். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், '(இந்தச் செயலுக்கான) நற்கூலி உங்கள் இருவருக்கும் உண்டு' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)