இவர்கள் அனைவரும் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவே அறிவிக்கின்றனர். ஸாலிஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ''பிறகு அல்லாஹ் (நபி (ஸல்) அவர்களின் உயிரைக்) கைப்பற்றும் வரை அவர்கள் தொழவில்லை'' எனும் தகவல் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் ஜுஹ்ரீ அவர்கள் வழியாக, ஸாலிஹ் அவர்கள் ஜுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸின் கருத்துப்படியே இந்த அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளனர்.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர் தொடரில், யூனுஸ் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளது. மஃமர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலில் சச்சரவு செய்துகொண்டிருந்தோரின் இரைச்சலைக் கேட்டார்கள்" என்று (உம்மு சலமா (ரலி)) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.