حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ .
அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உமது பணப்பையை நீர் மூடி வைக்காதீர்; அவ்வாறாயின் அல்லாஹ்வும் உமக்கு (தன் அருட்கொடைகளைத்) தடுத்துவிடுவான். உம்மால் இயன்றதை அளியுங்கள்."
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸுபைர் (ரழி) அவர்கள் எனக்குக் கொண்டு வருவதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. அவர் கொண்டு வருவதிலிருந்து நான் சிறிதளவு கொடுத்தால் என் மீது ஏதேனும் குற்றம் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்; (கொடுக்காமல்) முடிந்து வைக்காதீர்கள். (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உமக்கு (வழங்குவதை) முடிந்து விடுவான்" என்று கூறினார்கள்.