وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ أَبِي أَوْفَى - رضى الله عنه - قَالَ: { كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ: اَللَّهُمَّ صَلِّ عَلَيْهِمْ } مُتَّفَقٌ عَلَيْهِ [1] .
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தார் தங்கள் ஸதகாவுடன் (தர்மப் பொருட்களுடன்) வந்தால், அவர்கள் ‘அல்லாஹும்ம ஸல்லி அலைஹிம்’ (யா அல்லாஹ்! இவர்கள் மீது உனது அருளையும், நற்கிருபையையும் பொழிவாயாக!) என்று கூறுவார்கள்.”