“{வ குலூ வஷ்ரபூ ஹத்தா யதபய்யன லகுமுல் கை்துல் அப்யலு மினல் கை்தில் அஸ்வத்} (கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்) எனும் இறைவசனம் அருளப்பட்டது. (துவக்கத்தில்) அதில் {மினல் ஃபஜ்ரி} (அதிகாலையில் இருந்து) எனும் சொல் அருளப்படவில்லை. எனவே, மக்களில் (சில) ஆண்கள் நோன்பு நோற்க விரும்பினால், அவர்களில் ஒருவர் தம் காலில் ஒரு வெள்ளை நூலையும் கருப்பு நூலையும் கட்டிக் கொள்வார்; அவ்விரண்டும் அவருக்குத் தெளிவாகத் தெரியும் வரை அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ் {மினல் ஃபஜ்ரி} (அதிகாலையில் இருந்து) எனும் சொல்லை அருளினான். அப்போதுதான், அது இரவையும் பகலையும் குறிக்கிறது என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.”
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"வகுலூ வஷ்ரபூ ஹத்தா யதபய்யன லகுமுல் கைத்துல் அப்யளு மினல் கைத்தில் அஸ்வத்" (கருப்பு நூலிலிருந்து வெள்ளையான நூல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்) எனும் இறைவசனம் அருளப்பட்டது. ஆனால், "மினல் ஃபஜ்ரி" என்பது (அப்போது) அருளப்படவில்லை. எனவே நோன்பு நோற்க விரும்பும் ஆண்கள், தமது கால்களில் வெள்ளை நூலையும் கருப்பு நூலையும் கட்டிக்கொள்வார்கள். அவ்விரண்டும் தமக்குத் தெளிவாகத் தெரியும் வரை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு அல்லாஹ் "மினல் ஃபஜ்ரி" (ஃபஜ்ருடைய - வைகறைப் பொழுதிலிருந்து) என்பதை அருளினான். அதன் பிறகே அவர்கள், அது இரவையும் பகலையும் குறிக்கிறது என்று புரிந்துகொண்டார்கள்.
"வ குலூ வஷ்ரபூ ஹத்தா யதபய்யன லகுமுல் கைத்துல் அப்யளு மினல் கைத்தில் அஸ்வதி" (கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்) என்ற இந்த இறைவசனம் அருளப்பட்டபோது, (மக்களில்) ஒருவர் ஒரு வெள்ளை நூலையும் ஒரு கருப்பு நூலையும் எடுத்துக்கொண்டு, அவ்விரண்டும் தனக்குத் தெளிவாகத் தெரியும் வரை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் "மினல் ஃபஜ்ரி" (விடியற்காலையிலிருந்து) என்பதை அருளும் வரை (இந்நிலை நீடித்தது). அதன் பின்னரே அது (விடியற்காலை என்பது) தெளிவுபடுத்தப்பட்டது.