இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1109 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ عَبْدِ رَبِّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ، أَنَّ أَبَا بَكْرٍ، حَدَّثَهُ أَنَّ مَرْوَانَ أَرْسَلَهُ إِلَى أُمِّ سَلَمَةَ - رضى الله عنها - يَسْأَلُ عَنِ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا أَيَصُومُ فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ لاَ مِنْ حُلُمٍ ثُمَّ لاَ يُفْطِرُ وَلاَ يَقْضِي ‏.‏
அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மர்வான் தம்மை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம், ஒருவர் ஜுனுப் நிலையில் இருக்கும்போது ஃபஜ்ரு நேரம் அவரை அடைந்துவிட்டால் அவர் நோன்பு நோற்க வேண்டுமா என்று கேட்பதற்காக அனுப்பியதாகவும், அதற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில வேளைகளில், கனவு ஸ்கலிதத்தின் காரணமாக அன்றி, தாம்பத்திய உறவின் காரணமாக ஜுன்பியாக இருந்தார்கள் என்றும், அந்த நிலையிலேயே ஃபஜ்ரு நேரமும் அவர்களை அடைந்துவிடும் என்றும், ஆயினும் அவர்கள் (அந்த) நோன்பை முறித்ததுமில்லை, (அதற்காகப்) பின்னர் ஈடு செய்ததுமில்லை என்றும் கூறியதாகவும் அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح