அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளைப் பற்றிக் கூற நான் கேட்டேன்:
"நிச்சயமாக, இது அறியாமைக் காலத்து மக்கள் நோன்பு நோற்று வந்த ஒரு நாளாகும். எனவே, யார் இதை நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்; யார் இதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் விட்டுவிடட்டும்."