உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அரஃபா நாளும், அறுத்துப் பலியிடும் நாளும், அத்தஷ்ரீக் நாட்களும் இஸ்லாமியர்களான நமது ஈத் (பெருநாள்) ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அரஃபா நாள், அறுப்புப் பெருநாள், தஷ்ரீக் உடைய நாட்கள் ஆகியவை இஸ்லாமிய சமூகமாகிய நமது பண்டிகை நாட்களாகும். இவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
وَعَنْ نُبَيْشَةَ اَلْهُذَلِيِّ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ أَيَّامُ اَلتَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ, وَذِكْرٍ لِلَّهِ عَزَّ وَجَلَّ } رَوَاهُ مُسْلِمٌ [1] .
நுபைஷா அல்-ஹுதலி (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“தஷ்ரீக்குடைய நாட்கள் (அதாவது, ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்த துல்ஹஜ் மாதத்தின் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்கள்) உண்பதற்கும், பருகுவதற்கும், மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கும் உரிய நாட்களாகும்."