(முன்பு கூறப்பட்ட) இதே ஹதீஸில் மேலதிகமாகக் கூறப்பட்டுள்ளதாவது:
அவர், “அல்லாஹ்வின் தூதரே! திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது பற்றி (தங்கள் கருத்து) என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர் (ஸல்), “அந்நாளில்தான் நான் பிறந்தேன்; மேலும் அந்நாளில்தான் என் மீது குர்ஆன் அருளப்பட்டது” என்று கூறினார்கள்.