حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، أَخْبَرَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُسْلِمٍ الْقُرِّيِّ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعُمْرَةٍ وَأَهَلَّ أَصْحَابُهُ بِحَجٍّ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக (தமது நிய்யத்தை அறிவித்து) தல்பியாவை உரக்கக் கூறினார்கள். ஆனால், அவர்களுடைய தோழர்கள் (ரழி) ஹஜ்ஜுக்காக (தமது நிய்யத்தை அறிவித்து) தல்பியாவை உரக்கக் கூறினார்கள்.