حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتَى عَلَى رَجُلٍ، قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً، سُنَّةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. وَقَالَ شُعْبَةُ عَنْ يُونُسَ أَخْبَرَنِي زِيَادٌ.
ஸியாத் பின் ஜுபைர் அறிவித்தார்கள்:
நான் இப்னு உமர் (ரழி) அவர்களைக் கண்டேன். அவர்கள், ஒருவர் தமது 'பதனா'வை (ஹஜ் அல்லது உம்ராவின் போது பலியிடப்படும் ஒட்டகத்தை) அறுப்பதற்காக (தரையில்) மண்டியிடச் செய்திருந்த நிலையில் அவரிடம் வந்தார்கள். அப்போது இப்னு உமர் (ரழி), "அதை (அதன் ஒரு காலை) கட்டப்பட்ட நிலையில் நிற்க வைத்து (நஹ்ர் செய்வதற்கு) எழுப்புவீராக! (இதுவே) முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்" என்று கூறினார்கள்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يُونُسُ، أَخْبَرَنِي زِيَادُ بْنُ جُبَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ بِمِنًى فَمَرَّ بِرَجُلٍ وَهُوَ يَنْحَرُ بَدَنَتَهُ وَهِيَ بَارِكَةٌ فَقَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم .
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) கூறினார்: நான் மினாவில் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் இருந்தேன். அப்போது, ஒருவர் தனது ஒட்டகத்தை அது அமர்ந்திருந்த நிலையில் அறுத்துப் பலியிட்டுக் கொண்டிருக்க, இப்னு உமர் (ரழி) அவரைக் கடந்து சென்றார்கள். (அவர் அதைப் பார்த்ததும்) "அதை எழுப்பி நிறுத்தி, (அதன்) காலைக் கட்டுங்கள். இதுவே முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை (சுன்னா) ஆகும்" என்று கூறினார்கள்.