அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் விளைந்த கனி கொண்டுவரப்பட்டபோது அவர்கள் கூறினார்கள்:
யா அல்லாஹ், எங்கள் நகரத்திலும், எங்கள் கனிகளிலும், எங்கள் முத்திலும், எங்கள் ஸாஃகளிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக; பரக்கத்தின் மீது பரக்கத்தை அருள்வாயாக. பிறகு அதை அவர்கள் அங்கிருந்த பிள்ளைகளிலேயே சிறியவருக்குக் கொடுப்பார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (அந்தப் பருவத்தின்) முதல் பழங்கள் கொண்டுவரப்படும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
“அல்லாஹ்வே, எங்கள் நகரத்திலும், எங்கள் பழங்களிலும், எங்கள் முத்திலும், எங்கள் ஸாஃவிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக,* பரக்கத்தின் மீது பரக்கத்.” பிறகு, அங்கே இருக்கும் குழந்தைகளிலேயே மிகச் சிறியவருக்கு அதை அவர்கள் கொடுப்பார்கள்.