حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْحُبَابِ، سَعِيدَ بْنَ يَسَارٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ. وَهْىَ الْمَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ .
நான் ஒரு ஊருக்கு (ஹிஜ்ரத் செய்யும்படி) கட்டளையிடப்பட்டேன்; அது மற்ற ஊர்களை விழுங்கிவிடும் (வென்றுவிடும்). யத்ரிப் என்று அழைக்கப்படும் அதுவே மதீனாவாகும். மேலும் கொல்லனின் உலை இரும்பின் கசடை அகற்றுவது போல் அது (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் பட்டணங்களை உண்ணும் ஒரு பட்டணத்திற்கு (குடியேற) கட்டளையிடப்பட்டேன். அவர்கள் அதனை 'யத்ரிப்' என்று கூறுகின்றனர். ஆனால் அது மதீனா ஆகும். கொல்லனின் உலை இரும்பிலிருந்து அதன் கசடுகளை அகற்றுவதைப் போன்று அது (தீய) மனிதர்களை அகற்றிவிடும்."